வௌிநாட்டு மதுபான போத்தலில் இருந்தது பச்சை தண்ணீர்தான் – மகனை காப்பாற்றும் பாலித்த

0
926
tamilnews 72 hours resettle affected natural disaster victims

(tamilnews Despite fact name wine liquor car accident drinking water)

விபத்துக்குள்ளான தனது மகனின் வாகனத்தினுள் இருந்து வௌிநாட்டு மதுபான போத்தலின் பெயர் மாத்திரம் மேலாக ஒட்டப்பட்டிருந்த போதிலும் அதனுள் வெறும் குடிநீர் மாத்திரமே இருந்ததாக அமைச்சர் பாலித்த ரங்கே பண்டார தெரிவித்தார்.

இன்று (09) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அதேவேளை, வாகனத்தினுள் வாள்கள் மற்றும் பொல்லுகள் என்பனவும் இருந்ததாக கூறப்படும் தகவலில் எந்தவித உண்மையும் இல்லை என அவர் குறிப்பிட்டார்.

அவற்றை வேறு சிலரே சம்பவ இடத்திற்கு கொண்டு வந்திருக்கலாம் எனவும், பொலிஸார் இது தொடர்பாக முறையான விசாரணைகளை மேற்கொள்ளவில்லை என்றும் அவர் குற்றம்சுமத்தினார்.

(tamilnews Despite fact name wine liquor car accident drinking water)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

 Tamil News Group websites