கள்ளத்தனமாக இலங்கைக்கு தப்பிச் செல்ல முயன்ற தமிழர்கள் ராமேஸ்வரத்தில் கைது (Video)

0
410
Delhi three year old girl tried flee boat Rameswaram

(Delhi three year old girl tried flee boat Rameswaram)

ராமேஸ்வரம் வழியாக இலங்கைக்கு கள்ளத்தனமாக படகில் தப்பிச்செல்ல முயன்ற டெல்லியைச் சேர்ந்த பெண் மற்றும் மூன்று வயது குழந்தை உட்பட நான்கு பேரை போலீஸார் கைது செய்தனர்.

ராமேஸ்வரத்தில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் வைத்து அவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் டெல்லியில் உள்ள அம்பேத்கார் காலணியில் கமல் (26) அவரின் சகோதரர் லோகிதாஸ் (19) கமலின் மனைவி கங்கா (21) குழந்தை சைனி (3) ஆகிய நான்கு பேரும் வசித்து வந்தனர்.

சில தினங்களுக்கு முன் வட இந்தியர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் கமலையும் அவரின் சகோதரர் லோகிதாஸையும் கொலை செய்து விடுவதாக மிரட்டப்பட்டதால் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.

புகார் கொடுத்ததால் ஆத்திரத்தில் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டு விடும் எனவே, அச்சமாக உள்ளதாக அவுஸ்த்திரேலியாவிலுள்ள கமலின் சகோதரருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இதனையடுத்து, நான்கு பேரும் இலங்கைக்கு வந்து விடுங்கள் அங்கிருந்து அவுஸ்திரேலியாவுக்கு நண்பர்கள் மூலம் வந்துவிடலாம் எனக் கூறியதால் அவர்கள் அனைவரும் நேற்றுக்காலை மதுரைக்கு சென்றுள்ளனர்.

இதனையடுத்து, இரவு உச்சிப்புளி அருகே புள்ளைமடம் கடற்கரையிலிருந்து அதேபகுதியைச் சேர்ந்த பிரபாகர் மற்றும் ஜலீல் கள்ளத்தோணி மூலம் இலங்கைக்கு அனுப்பி வைக்க ஏற்பாடுகள் செய்தனர்.

இந்தநிலையில், இவர்களை மதுரையிலிருந்து ஏற்றிவந்த கார் ஓட்டுநர் பொலிசாரின் வாகன சோதனையின் போது சிக்கியதால் கார் ஓட்டுநர் இவர்களைப் பற்றி கூறியுள்ளார்.

இதனையறிந்த, முகவர்கள் இவர்களை இரண்டு நாள் கழித்து அனுப்பிவைப்பதாக கூறியதையடுத்து, நான்கு பேரும் ராமேஸ்வரத்தில் தனியார் தங்கும் விடுதியில் தங்கி இருந்த போது பொலிசாரால் கைது செய்யப்பட்டனர்.

இதனையடுத்து, இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ள பொலிஸார் இவர்களை இலங்கைக்கு அனுப்பிவைக்க பணம் வாங்கி ஏற்பாடு செய்த இருவரையும் பொலிசார் தேடி வருகின்றனர்

(Delhi three year old girl tried flee boat Rameswaram)

More Tamil News

Tamil News Group websites :