தமிழீழ விடுதலைப் புலிகளின் 1,500 கோடி அரசுடமையாக்கப்பட்டது

0
541
tamilnews Liberation Tigers Tamil Eelam properties government owned

(tamilnews Liberation Tigers Tamil Eelam properties government owned)

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சுமார் 1,500 கோடி ரூபா சொத்துக்கள் மற்றும் உடமைகள் அரசுடமையாக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாத ஒழிப்பு துறையினர் இதுவரை காலமும் இந்தளவிலான சொத்துக்களை விசாரணைகளின் மூலம் கண்டறிந்ததாக தெரிவித்துள்ளனர்.

விடுதலைப் புலிகளின் இந்த சொத்துக்களுக்கு புறம்பாக மேலும் பல உடமைகளும், சொத்துக்களும் இருப்பதாக தகவல்கள் வௌியாகியுள்ள போதிலும் அந்த தகவல்களை உறுதிப்படுத்திக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அந்தவகையில், அரசுடமையாக்கப்பட்ட சொத்துக்களில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை அண்டிய பகுதியில் இருந்த காணி, வௌ்ளவத்தை பகுதியில் உள்ள சொகுசு ஆடம்பர வீட்டுத் தொகுதி, கொழும்பும் ஜம்பட்டா வீதியில் உள்ள நவீன அச்சகம், கருவாத்தோட்டத்தில் உள்ள காணி, படகுகள் மற்றும் வங்கிக் கணக்குகளும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

(tamilnews Liberation Tigers Tamil Eelam properties government owned)

More Tamil News

Tamil News Group websites :