இன்றும் சீரற்ற நிலை – பல பகுதிகளுக்கு பலத்த மழை

0
393
weather situation bad meteorology department notice Lankan latest news

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்றைய தினமும் இடியுடனான காலநிலை தொடரும் என காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. weather situation bad meteorology department notice Lankan latest news

கால நிலை அவதான நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, மேல், தென், சபரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் இடைக்கிடை இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் என அந்த திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சபரகமுவ மாகாணத்தில் சில பிரதேசங்களில் 100 மில்லி மீட்டர் வரை மழை பொழிய கூடும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அம்பாறை மற்றும் பதுளை மாவட்டங்களில் சில பிரதேசங்களில் 2 மணிக்கு பின்னர் இடியுடனான கூடிய மழை பொழிய கூடும் என்பதுடன், அனுராதபுரம் மாவட்டத்தில் சில பிரதேசங்களில் மழை பொழிய கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, தென் மாகாணத்திலும் மொனராகல, மாத்தளை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மணித்தியாலத்திற்கு 50 கிலோ மீட்டர் வேகத்தில் கடும் காற்று வீச கூடும் என வளிமண்டல திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
weather situation bad meteorology department notice Lankan latest news

More Tamil News

Tamil News Group websites :