(Karn Sharma First Player Win Hat-trick IPL Titles)
ஐ.பி.எல். தொடரில் இம்முறை சென்னை அணியில் விளையாடிய வீரர் கரன் சர்மா எந்தவொரு வீரரும் படைக்காத புதிய சாதனையொன்றை படைத்துள்ளார்.
இதுவரை நடைபெற்று முடிந்துள்ள ஐ.பி.எல். தொடர்களில் தொடர்ச்சியாக மூன்று முறை சம்பியன் கிண்ணத்தை கைப்பற்றி, ஹெட்ரிக் சம்பியன் பட்டத்தை கைப்பற்றிய வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ஆகியுள்ளார்.
கரன் சர்மா 2016ம் ஆண்டு சன்ரைசஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடினார். தொடர்ந்து கடந்த வருடம் மும்பை அணிக்காக விளையாடினார். தற்போது சென்னை அணிக்காக விளையாடினார்.
இந்த மூன்று அணிகளும் தொடர்ந்து சம்பியன் கிண்ணங்களை வென்றுள்ளதுடன், மூன்று கிண்ணங்களை கைப்பற்றும் அணிகளிலும் இவர் விளையாடியுள்ளார். இதன்மூலம் ஹெட்ரிக் ஐ.பி.எல். சம்பியன் கிண்ணங்களை கைப்பற்றிய ஒரே ஒரு வீரராக இவர் பதிவாகியுள்ளார்.
இந்த தொடரில் ஒவ்வொரு இடைக்கிடையில் ஒவ்வொரு போட்டிகளில் விளையாடிய கரன் சர்மா, இறுதிப்போட்டியில் விளையாடி முக்கிய விக்கட்டான வில்லியம்ஸனின் விக்கட்டினை வீழ்த்தியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
- வெற்றியுடன் பிரென்ச் ஓபனை ஆரம்பித்தார் செரீனா!
- இலங்கை அணிக்கெதிரான டெஸ்ட் தொடர் : அறிவிக்கப்பட்டது மே.தீவுகள் அணிக்குழாம்!
- முரளிதரனை தலைகுணியசெய்த சம்பவம்! : காலம் கடந்து வெளியானது உண்மை!!!
- புதிய தலைமை பயிற்றுவிப்பாளரை நியமித்தது அவுஸ்திரேலியா
- இலகு வெற்றியுடன் காலிறுதிக்கு தகுதிபெற்றார் தத்ரா சில்வா
- திரில் வெற்றியுடன் சம்பியன்ஸ் லீக் இறுதிப்போட்டியில் லிவர்பூல்!
- சென்னையில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்குமா கொல்கத்தா!
- கொல்கத்தாவை மிரள வைத்த ரஷீட் கான்!!! : சென்னையுடன் இறுதிப்போட்டியில் ஹைதராபாத்!!!
<<Tamil News Group websites>>