பயங்கரவாத புலனாய்வு பிரிவு விசாரணை அதிகாரிகளிடம் தாம் எதனையும் மறைக்கவில்லை

0
464
terrorism investigation unite absolutely true former ltte member venthan

பயங்கரவாத புலனாய்வு பிரிவு விசாரணை அதிகாரிகளிடம் தான் எந்தவிடயங்களையும் மறைக்கவில்லை. ஜனநாயக போராளிகள் கட்சியின் எதிர்கால இலக்கினையே தெரிவித்தேன் என அக்கட்சியின் தலைவர் வேந்தன் தெரிவித்துள்ளார். terrorism investigation unite absolutely true former ltte member venthan

ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் வேந்தனிடம் கடந்த 26 ஆம் திகதி பயங்கரவாத புலனாய்வு பிரிவு விசாரணை பிரிவினர் சுமார் முற்பகல் 9.30 முதல் பிற்பகல் 2.30 வரை விசாரணைகளை மேற்கொண்டனர்.

இது தொடர்பில் தனியார் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

விசாரணையின் போது கடந்த 18 ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட நினைவேந்தல் நிகழ்வுகள் குறித்து கேள்விகள் முன்வைக்கப்பட்டதாகவும்,

இறுதி கட்ட யுத்தத்தில் உயிரிழந்த எமது உறவுகளை நினைவு கூர்வதற்கான அந்த நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது என தாம் தெரிவித்ததாகவும், குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஜனநாயக போராளிகள் கட்சியின் இலக்கு தொடர்பிலும் கொள்கை தொடர்பில் பல குறுக்கு கேள்விகள் கேட்கப்பட்டதாகவும், தாம் தெளிவாக விசாரணை பிரிவு அதிகாரிகளுக்கு பதிலளித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகளை ஒன்றிணைத்து ஜனநாயக ரீதியில் அரசியல் பணிகளை முன்னெடுப்பதே தனது நோக்கம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் வேந்தன் விடுதலை புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் என்பதோடு, பூசா வெலிக்கடை சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்து பின்னர் புனர்வாள்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
terrorism investigation unite absolutely true former ltte member venthan

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

The post மனித பாவனைக்கு பொருத்தமற்ற டின் மீன்கள் appeared first on TAMIL NEWS.