(Tamil Nadu Madurai District Young Boy Murder Friends Arrested)
இந்தியா தமிழ் நாட்டின் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகில் 12 வயது சிறுவனான கவின்குமாரை அவனது நண்பர்கள் 3 பேர் ஊருக்கு அருகிலுள்ள கண்மாய்க்குக் குளிக்கச் செல்லலாம் என அழைத்துச் சென்றுள்ளனர்.
குளிக்கச் சென்ற சிறுவன் இரவாகியும் வீடு திரும்பாத நிலையில், பெற்றோர்கள் அனைத்து உறவினர்கள் வீட்டிலும் தேடி திரிந்த போது ,
குளத்து தண்ணீரில் சிறுவனுடைய உடலில் காயங்களுடன் சடலம் கண்டு பிடிக்கப்பட்டது.
சம்பவ இடத்துக்கு விரைந்த போலிசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கவின்குமாருடன் சென்ற சக சிறுவர்களே அவனை அடித்துக் கொன்றது தெரியவந்தது.
இந்த கொலைக்கு காரணம் , அவனுடன் சென்ற சிறுவர்கள் அவனை ஓரினச் சேர்க்கைக்கு கேட்ட போது அவன் ஒத்துழைக்க மறுத்தமையே என்னும் விடயம் அங்கு பெரும் பரபரப்பை உண்டுபண்ணியுள்ளது.
சிறுவனை கொலை செய்ததாகக் கூறப்படும் மூன்று பேருமே 14ல் இருந்து 15 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றது.
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
***************************************
நிர்வாண செய்தி வாசிப்புக்கு நேர்முக தேர்வு நடாத்தும் செய்தி நிறுவனம்!
பெற்ற தாயுடன் பாலியல் உறவு வைத்த மகன்! கோடாரியால் போட்டு தள்ளிய தந்தை!
முழு ஆடையில் உள்ளாடை தெரிய உச்ச கட்ட கவர்ச்சியில் ப்ரியங்கா சோப்ரா! (படங்கள் இணைப்பு)