டெங்கு நோயினால் 20 ஆயிரத்து 83 பேர் பாதிப்பு

0
452
dengue keep environment clean twenty thousand people effect

நாட்டின் பல பிரதேசங்களில் டெங்கு குடம்பிகளின் பெருக்கம் சடுதியாக அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. dengue keep environment clean twenty thousand people effect

நிலவும் மழையுடனான காலநிலை காரணமாகவே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத் அமைச்சின் தொற்று நோய் ஆய்வு பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் விரைவாக நுளம்பு ஒழிப்பு வேலைத்திட்டத்தை முன்னெடுக்காவிடின் அதன் பாதிப்பு கடுமையானதாக இருக்குமெனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்த வருடத்தின் மே மாதத்தில் மாத்திரம் 2 ஆயிரத்து 647 பேர் டெங்கு தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், இந்த வருடத்தின் இதுவரையிலுமான காலப்பகுதியில் 20 ஆயிரத்து 83 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் ஆய்வு பிரிவு தெரிவித்துள்ளது.
dengue keep environment clean twenty thousand people effect

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

The post மனித பாவனைக்கு பொருத்தமற்ற டின் மீன்கள் appeared first on TAMIL NEWS.