பிரான்ஸில், முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பிற்கான கவனயீர்ப்புப் போராட்டம் (புகைப்படங்கள் உள்ளே)

0
466
France celebrated mullivaikal event photoes released

பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – பிரான்சு தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் பாரிசின் புறநகர்ப் பகுதிகளில் முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பிற்கான கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது. France celebrated mullivaikal event photoes released

அந்த வகையில் நேற்று (26.05.2018) சனிக்கிழமை திறான்சி பிராங்கோ தமிழ்ச்சங்கத்தின் ஏற்பாட்டில் திரான்சி நகரசபை முன்றலில் காலை 10.00மணிமுதல் மதியம் 1.30வரை கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெற்றது. இதில் திரான்சி வாழ் தமிழ்மக்களும் திரான்சி தமிழ்ச்சோலை மாணவர்களும் பங்குபற்றினார்கள்.

குறித்த கவனயீர்ப்புப் போராட்டத்தில் Seine Saint Denis பிராந்திய பாராளுமன்ற உறுப்பினரும்(Député Du Seine-Saint-Denis). (UDI) கட்சியின் தலைவரும். பிரான்சு பாராளுமன்றத்தில் தமிழர்களுக்கான பாராளுமன்றக் குழுவின் உபதலைவருமான (Vice-président groupe d’études peuple Tamoul).  திரு Jean-Christophe LAGARDE அவர்கள் நேரடியாக மக்களுடன் கவனயீர்ப்பில் கலந்து கொண்டார்.

பின்னர் திரான்சி மாநகர சபையில் குறித்த நாடாளுமன்ற உறுப்பினருடரான சந்திப்பு ஒரு மணிநேரம் இடம்பெற்றது.

பிரான்ஸு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – பிரான்ஸு தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் பாரிஸின் புறநகர்ப் பகுதிகளில் முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பிற்கான கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெற்றது.

அந்த வகையில் நேற்று (26.05.2018) சனிக்கிழமை திறான்சி பிராங்கோ தமிழ்ச்சங்கத்தின் ஏற்பாட்டில் திரான்சி நகரசபை முன்றலில் காலை 10.00மணிமுதல் மதியம் 1.30வரை கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெற்றது. இதில் திரான்சி வாழ் தமிழ்மக்களும் திரான்சி தமிழ்ச்சோலை மாணவர்களும் பங்குபற்றினார்கள்.

குறித்த கவனயீர்ப்புப் போராட்டத்தில் Seine Saint Denis பிராந்திய பாராளுமன்ற உறுப்பினரும்(Député Du Seine-Saint-Denis), (UDI) கட்சியின் தலைவரும், பிரான்ஸு பாராளுமன்றத்தில் தமிழர்களுக்கான பாராளுமன்றக் குழுவின் உபதலைவருமான (Vice-président groupe d’études peuple Tamoul), திரு Jean-Christophe LAGARDE அவர்கள் நேரடியாக மக்களுடன் கவனயீர்ப்பில் கலந்து கொண்டார்.

பின்னர் திரான்சி மாநகர சபையில் குறித்த நாடாளுமன்ற உறுப்பினருடரான சந்திப்பு ஒரு மணிநேரம் இடம்பெற்றது.

குறித்த சந்திப்பில் எமது கோரிக்கையடங்கிய மனு பாராளுமன்ற உறுப்பினரிடம் கையளிக்கப்பட்டதுடன் எமது போராட்டம் இன அழிப்பு ஈழத்தமிழர்களின் பிரச்சனைகள் பற்றி கூறப்பட்டது.

நாடாளுமன்ற உறுப்பினர் தான் தமிழர்கள் பக்கம் நிற்பதாகவும் ஈழத்தமிழர்களின் பிரச்சனை பற்றி பிரான்ஸு நாடாளுமன்றத்தில் உரையாற்றுவதாகவும் உறுதியளித்ததுடன். பிரான்ஸில் வாழும் தமிழர்கள் பிரான்ஸு மொழி கலாச்சாரம் ஆகியவற்றையும் கற்று அறிந்து கொள்ளவேண்டும் என்பதை கூறியிருந்தார். தொடர்ந்து உங்கள் இன விடுதலைக்கான பணிகளை செய்யுமாறும் கூறியிருந்தார்.

அவரைத் தொடர்ந்து M.Chabani-Maire Adj (conseiller Départemental) Seine Saint Denis பிராந்திய கவுன்சிலர் அவர்களும் கலந்துகொண்டார். அவரிடம் எமது கோரிக்கையடங்கிய மனு கையளிக்கப்பட்டது. தொடர்து அவர் ஈழத் தமிழர்களின் பிரச்சனைகளைக் கேட்டறிந்து கொண்டார். மற்றும் திரான்சி நகரசபை உறுப்பினர் திரு.அலன் ஆனந்தன் அவர்களும் குறித்த கவனயீர்ப்பில் கலந்து கொண்டார்.

 

நன்றி: இணையம்

**Most Related Tamil News**

**Tamil News Groups Websites**