floating fish die lake diluted selam
சேலம் அருகே உள்ள ஏரியில் நீர் மாசடைந்து ஏராளமான மீன்கள் இறந்து மிதப்பதால், தொற்று நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நெய்காரப்பட்டியில் உள்ள ஏரியில் சாயக்கழிவுகள் கலப்பதும், மாநகராட்சி குப்பைகள் கொட்டப்படுவதுமே நீர் மாசடைந்துள்ளதுக்கான காரணம் என்று அப்பகுதி பொதுமக்கள் கூறியுள்ளனர்.
மேலும் சுகாதார சீர்கேடு குறித்து அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை, என்று பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மழை காலங்களில் சாயப்பட்டறை கழிவுகளை ஏரியில் திறந்து விடுவதால், ஏரி மாசடைந்துள்ளது. இதனால் ஏரியில் இருந்த மீன்கள் செத்து மிதக்கின்றன.
இதனையடுத்து ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதப்பதால் அப்பகுதியில் துர்நாற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுவட்டாரத்தில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. ஏரி மாசடைந்து வருவதால் சுற்றுவட்டார நான்கு கிராமங்களின் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு வருவதாக பொதுமக்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து உடனடி நடவடிக்கை எடுத்து மாசடைந்த நீரை சுத்தப்படுத்துவதோடு, மீண்டும் மாசடையாமல் தடுக்க அரசு உடனடி நடவடிக்க எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
More Tamil News
- ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்படும் – ஓ.பி.எஸ் திட்டவட்டம்!
- பேருந்து விபத்தில் 35க்கும் மேற்பட்டோர் படுகாயம்!
- கோடை விழாவையொட்டி வாத்து பிடிக்கும் போட்டி!
- பணம் எடுத்தால் அடுத்த மாதம் வரை வங்கிக் கணக்கு முடக்கம்!
- இளைஞரின் கழுத்தை அறுத்து கொலை!