புதிய வகை கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ள இந்திய அணியின் முன்னணி வீரர்கள்!!!

0
451
100 ball cricket match England news Tamil

(100 ball cricket match England news Tamil)

இங்கிலாந்து கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் நடைபெறவிருக்கும் 100 பந்துகள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் முன்னணி வீரர்கள் விளையாடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அணிக்கு 100 பந்துகள் அடங்கிய கிரிக்கெட் தொடரை எதிர்வரும் 2020ம் ஆண்டு நடத்துவதற்கு இங்கிலாந்து கிரிக்கெட் சபை ஏற்பாடுசெய்துள்ளது.

இந்த போட்டித் தொடரில் இந்திய அணியின் முன்னணி வீரர்களான விராட் கோஹ்லி, டோனி மற்றும் ரோஹித் சர்மா ஆகிய முன்னணி வீரர்களை அனுப்புவதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஐ.பி.எல். தொடரின் பிரபல்யத்தை பாதுகாப்பதற்கு இந்திய கிரிக்கெட் சபை தங்களது வீரர்களை வெளிநாட்டு இருபதுக்கு-20 தொடர்களுக்கு அனுப்புவதை தவிர்த்து வருகின்றது.

எனினும் ஐ.பி.எல் தொடரின் 11 சீசன்களுக்கு பின்னரும் இந்திய வீரர்களை வெளிநாட்டு தொடர்களுக்கு அனுப்பாமல் இருப்பது தற்போது கேள்விக்குறியாகியுள்ளது.

எனினும் அறிமுகப்படுத்தப்படவுள்ள 100 பந்துகள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் முன்னணி வீரர்கள் இருந்தால் தொடரின் ஆரம்பம் சிறப்பாக அமையும் என இங்கிலாந்து கிரிக்கெட் சபை விரும்புவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

<<Tamil News Group websites>>