அரையிறுதி வாய்ப்பை இழந்தார் கரோலினா பிலிஸ்கோவா!

0
612
nuremberg cup 2018 Johanna Larsson win news Tamil

(nuremberg cup 2018 Johanna Larsson win news Tamil)

ஜேர்மனியில் நடைபெற்று வரும் நியூரம்பெர்க் கிண்ண டென்னிஸ் தொடரின் காலிறுதியில் செக்குடியரசின் கரோலினா பிலிஸ்கோவா தோல்வியடைந்துள்ளார்.

இன்று நடைபெற்ற காலிறுதிப்போட்டியில் சுவீடன் வீராங்கனை ஜொஹன்னா லெர்சொனை, பிலிஸ்கோவா எதிர்காண்டு விளையாடினார்.

இந்த போட்டியில் ஆரம்பம் கடுமையாக போராடிய பிலிஸ்கோவா 1-2 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தார்.

போட்டியின் ஆரம்ப செட்டை பிலிஸ்கோவா 7-5 என கைப்பற்றி,  முன்னிலை வகித்த போதிலும், அடுத்த இரண்டு செட்களிலும் சிறப்பாக ஆடிய லெர்சொன் 7-5 மற்றும் 6-4 என வெற்றிபெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

லெர்சொன் அரையிறுதிப்போட்டியில் செக்குடியரசு வீராங்கனை கெதரினா சினியாகோவாவை எதிர்கொள்ளவுள்ளார்.

<<Tamil News Group websites>>