மக்களை காப்பாற்றச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தருக்கு நேர்ந்த அவலம்

0
881
Flood disaster police officer Disappeared

(Flood disaster police officer Disappeared)
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையினால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிய பொதுமக்கள் சிலரை காப்பாற்றச் சென்ற பொலிஸ் அதிகாரியொருவர் காணாமல் போயுள்ளார்.

மாதம்பே பொலிஸ் நிலையத்தின் உத்தியோகத்தர் ஒருவரே இவ்வாறு பொதுமக்களை காப்பாற்றச் சென்ற போது, வெள்ள நீரினால் அடித்து செல்லப்பட்டு, காணாமல் போயுள்ளார்.

கிரியுல்ல பிரதேசத்தை சேர்ந்த 29 வயதுடைய பொலிஸ் உத்தியோகத்தரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

கல்கமுவை – உடலவெல கால்வாயை கடக்க முயன்ற போது, வெள்ள நீரில் அடித்து செல்லப்பட்டுள்ளார். இவ்வாறு காணாமல் போன நபரை தேடும் பணியில் கடற்படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

More Tamil News

Tamil News Group websites :

Tags; Flood disaster police officer Disappeared