state Andhra Pradesh girl raped children for 2 months
இந்திய ஆந்திரா மாநிலத்தில் 12 வயது சிறுமியை மிரட்டி 5 சிறுவர்கள் தொடர்ந்து 2 மாதம் வரை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய சம்பவம் ஒன்று வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் புனனூர் கிராமத்தில் பகத்சிங் நகரில் குடியிருக்கும் சிறுவர்கள் 5 பேர் அதே பகுதியில் குடியிருக்கும் சிறுமியை மிரட்டி பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியுள்ளனர்.
குறித்த சிறுவர்கள் 5 பேரும் ஆபாச படங்களுக்கு அடிமையானவர்கள் எனவும் அவர்களது தொலைபேசியில் பல எண்ணிக்கையிலான ஆபாச வீடியோக்களை வைத்திருந்ததாகவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக சிறுமியின் உறவினர்கள் பொலிஸாரிடம் புகார் அளித்துள்ளனர். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் ஒன்றிணைந்து சிறுவர்களை வீடு புகுந்து தாக்கிய நிலையில் பொலிஸார் அவர்களை மீட்டுள்ளனர். எஞ்சிய மூவரையும் பின்னர் பொலிஸார் கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது. பின்னர் 5 சிறுவர்களையும் உள்ளூர் நீதிமன்றம் ஒன்றில் சமர்ப்பித்து சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பியுள்ளனர்.
state Andhra Pradesh girl raped children for 2 months
More Tamil News
- பேராசிரியை நிர்மலாதேவி ஜாமின் கோரி மீண்டும் மனு!
- குடிக்க பணம் தராததால் பாட்டியை கொன்ற கொடூரம்!
- திமுக தோழமை கட்சிகள் இன்று முழு கடை அடைப்பு!
- ரோஹிங்கிய அகதிகள் முகாமில் பிரியங்கா சோப்ரா!
- பெட்ரோல்,டீசல் விலையை குறைத்தால் மக்கள் நலத் திட்டங்கள் பாதிக்கும் – நிதின் கட்கரி!
- திமுக மீது மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு!
- ஸ்டெர்லைட் ஆலையை நானே அடித்து நொறுக்குவேன் – வைகோ ஆவேசம்!
Tamil News Group websites :