நிட்டம்புவ துப்பாக்கி சூட்டில் தாய் பலி : மகன் படுகாயம் (இணைப்பு-2)

0
757
Shooting Nittambuwa mother son injured

(Shooting Nittambuwa mother son injured)
இணைப்பு 02
நிட்டம்புவ ஹக்வடுன பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் தாய் பலியாகியுள்ளதோடு மகன் தொடர்ந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இணைப்பு 01
நிட்டம்புவ பகுதியில் இன்று பகல் தாய், மற்றும் மகன் ஆகியோர் மீது இனந்தெரியாத நபரால் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு தாய் கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

தாயும், மகனும் மோட்டார் சைக்கிளில் பயணித்து கொண்டிருந்த போதே இனந்தெரியாத நபரால் மேற்படி துப்பாக்கி சூட்டை நடத்தியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் நிட்டம்புவ பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை