கடுவல பியகம பாலத்தில் அபாயம் இல்லை

0
735

(no damage Biyagama Kaduwela bridge)
புதிய கண்டி வீதியில் கடுவல பியகம நகரத்தின் ஊடாக அமைந்துள்ள கடுவெல பாலம் நிலத்திற்குள் அமிழும் அபாயம் இல்லையெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பராமரிப்பு மற்றும் முகாமைத்துவ பணிப்பாளர் கமல் அமரவீர இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

பாலத்தின் ஒரு பகுதி சேதமடைந்திருந்தாலும் பாரிய அளவிலான சேதங்கள் ஏற்படும் அபாயம் இல்லையென அறிவிக்கப்பட்டுள்ளது.

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கடுவல பியகம நகரத்தின் ஊடாக அமைக்கப்பட்டுள்ள முக்கிய பாலம் அச்சுறுத்தல் நிலையை எதிர்கொண்டிருப்பதாகவும் இந்த பாலத்தின் ஒரு நிரல் மூடப்பட்டிருப்பதாகவும் பொலிஸார் நேற்றைய தினம் தெரிவித்தனர்.

அதிகரித்த மழை வெள்ளத்தின் காரணமாக பாலத்தின் ஒரு பகுதி புதையுண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதன் காரணமாக இந்த பாலத்தினூடான வாகனப் போக்குவரத்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக நவகம பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த பாதையை பயன்படுத்துவோர் மாற்று பாதையை பயன்படுத்துமாறு பொலிஸார் தெரிவித்த நிலையில், கடுவல பியகம பாலம் நிலத்திற்குள் அமிழும் அபாயம் இல்லை என வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

More Tamil News

Tamil News Group websites :

Tags; no damage Biyagama Kaduwela bridge