முதலாளி முக்கியமா? நம் மக்கள் முக்கியமா? – சத்யராஜ்!

0
641
employer important? people important? - Sathyaraj

employer important? people important? – Sathyaraj

தூத்துக்குடியில் நேற்று ஸ்டெர்லைட் மூடக்கோரி 100-ஆவது நாளாக ஆயிரக்கணக்கான மக்கள் ஈடுபட்டனர், தடையை மீறி ஆட்சியர் அலுவலகத்துக்குள் நுழைந்த மக்கள் மீது போலீஸார் துப்பாக்கிசூடு நடத்தியது நெஞ்சை பதறவைத்து வேதனைப்படுத்துகிறது நடிகர் சத்யராஜ் தெரிவித்துள்ளார் .

மேலும் இறந்தவர்களின் அனைத்து குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

இது குறித்து எங்கோ வாழும் தனியார் நிறுவனத்தின் முதலாளி முக்கியமா? இல்லை இங்கே வாழும் நம் தமிழ் சொந்தங்களும், உறவுகளும் முக்கியமா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

More Tamil News

Tamil News Group websites :