trial case election pope interim speaker Karnataka state assembly begins
இந்திய கர்நாடக மாநில சட்டசபையின் இடைக்கால சபாநாயகராக பா.ஜ.க. கட்சியை சேர்ந்த கே.ஜி. போப்பையா தேர்ந்தெடுக்கப் பட்டதற்கு எதிரான வழக்கின் விசாரணை தற்போது உயர்நீதிமன்றத்தில் ஆரம்பமாகியுள்ளது.
இன்று பா.ஜ.க.வின் எடியூரப்பா அரசு கர்நாடக சட்டசபையில் தங்களது பெரும்பான்மையை நிரூபிக்க வேணடும். தற்போது சட்டசபையின் பலம் 222. ஆனால் இரண்டு தொகுதிகளில் வெற்றிபெற்ற குமாரசாமியின் ஒரு தொகுதி கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது. இதனால் தற்போதைய பலம் 221 மட்டுமே. இதனால் தற்போது பெரும்பான்மையை நிரூபிக்க 111 உறுப்பினர்கள் தேவை. பாஜக கட்சிக்கு 104 உறுப்பினர்கள் ஆதரவு இருக்கிறது.
இன்னும் 7 பேரின் ஆதரவு அந்த கட்சிக்கு தேவை. காங்கிரஸ் மற்றும் மஜத கூட்டணிக்கு மொத்தம் 117 எம்.எல்.ஏ.க்கள் பலம் இருக்கிறது.
இந்த நிலையில், தற்போது சபாநாயகரின் பங்கு இதில் முக்கியத்துவம் பெறுகிறது. பா.ஜ.க.வை சேர்ந்த கே.ஜி.போப்பையா தற்காலிக சபாநாயகராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். கர்நாடக ஆளுநர் வஜூபாய் வாலா இவரது தேர்விற்கு ஒப்புக்கொண்டுள்ளார்.
முதலில் கர்நாடக சட்டசபையின் தற்காலிக சபாநாயகராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஆர்.வி.தேஷ்பாண்டே தேர்ந்தெடுக்கப்பட இருந்தார்.
போப்பையா செய்யப்பட்டிருப்பதற்கு காங்கிரஸ், ம.ஜ.த. கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
அவர் விதிமுறைகளை பின்பற்றி தெரிவு செய்யப்படவில்லை என்று இரண்டு கட்சிகளும் தெரிவித்துள்ளது. இதற்கு எதிராக, போப்பையா நியமனத்தை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இதை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டது. இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் தற்போது விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
trial case election pope interim speaker Karnataka state assembly begins
More Tamil News
- குட்கா போதைபொருள் முறைகேடு வழக்கு: சி.பி.ஐ. விசாரணைக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு
- வாரணாசியில் மேம்பால விபத்து – அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க முதல்வர் உத்தரவு
- நாளை சட்டமன்றத்தில் பெரும்பான்மையை 100 சதவீதம் நிரூபிப்போம் – எடியூரப்பா
- நிலக்கரி பிரச்சனை : தமிழகத்தில் மின் வெட்டு அபாயம்!
- விஜயகாந்துடன் கூட்டணி : சமக தலைவர் சரத்குமார் பரபரப்பு பதில்!
- சென்னையில் இடிந்து விழுந்த பால்கனி : பேத்தியை உயிரைக் கொடுத்து காப்பாற்றிய பாட்டி!
- எம்.எல்.ஏ’க்களை தக்க வைக்க காங் – ம.ஜ.த – தீவிரம் : நள்ளிரவில் விடுதியை காலி செய்து ஐதராபாத் பயணம்!
- கோவையில் அமமுகவினர் மீது தாக்குதல் – கார் கண்ணாடி உடைப்பால் பரபரப்பு!
- கர்நாடகாவில் அரசியல் சாசனம் மீதான தாக்குதல் தொடங்கிவிட்டது : நடிகர் பிரகாஷ் ராஜ்!
- நிர்வாணப்படுத்தி கொடுமைப்படுத்துறாங்க’ – நீதிமன்றத்திலேயே சட்டையை கழட்டி கதறிய கைதி!
- சென்னையில் மழையா? மகிழ்ச்சியோடு எதிர்பார்க்கும் மக்கள்!
- பணம் கொடுக்கலனா கொலைப் பண்ணிடுவேன் – மிரட்டல் மன்னர்கள் கைது!
- போதையில் பேருந்து ஓட்டியவரால் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!
- காவலர் அருங்காட்சியகம் – முதன்முறையாக தமிழகத்தில் திறப்பு!
TAMIL NEWS GROUP WEBSITES :