Congress MLA BJP give money minister Congress issued odio
காங்கிரஸ் எம்.எல்.ஏ. பசனகவுடாவுக்கு 100 கோடி இந்திய ரூபா பணம் மற்றும் அமைச்சர் பதவியைத் தருவதாக பேரம் பேசியுள்ள பா.ஜ.க.வின் ஓடியோவை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது.
இந்திய கர்நாடகா மாநிலத்தில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் பா.ஜ.க.வை ஆட்சி அமைக்க ஆளுநர் வாஜூபாய் வாலா அழைப்பு விடுத்தார்.
அதன்படி முதல்வராக பதவியேற்ற எடியூரப்பாவை இன்று மாலை 4 மணிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்கும்படி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தள எம்.எல்.ஏ.க்களுக்கு 100 கோடி ரூபா தருவதாக பா.ஜ.க. பேரம் பேசிவருவதாக ம.ஜ.த.வின் குமாரசாமி குற்றஞ்சாட்டியிருந்தார்.
இந்த நிலையில், காங்கிரஸ் எம்.எல்.ஏ. பசனகவுடாவுக்கு 100 கோடி ரூபா பணம் மற்றும் அமைச்சர் பதவி தருவதாக பா.ஜ.க. சார்பில் ஜனார்த்தன ரெட்டி பேரம் பேசும் ஆடியோவை காங்கிரஸ் இன்று வெளியிட்டுள்ளது.
பா.ஜ.க. தேசியத் தலைவர் அமித் ஷாவின் முழு ஒப்புதலோடுதான் தான் பேசுவதாக அந்த ஓடியோவில் ஜனார்த்தன ரெட்டி கூறியுள்ளார்.
இன்று மாலை பெரும்பான்மையை நிரூபிக்கவுள்ள நிலையில், இந்த ஓடியோ வெளியாகியுள்ளமை கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Congress MLA BJP give money minister Congress issued odio
More Tamil News
- குட்கா போதைபொருள் முறைகேடு வழக்கு: சி.பி.ஐ. விசாரணைக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு
- வாரணாசியில் மேம்பால விபத்து – அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க முதல்வர் உத்தரவு
- நாளை சட்டமன்றத்தில் பெரும்பான்மையை 100 சதவீதம் நிரூபிப்போம் – எடியூரப்பா
- நிலக்கரி பிரச்சனை : தமிழகத்தில் மின் வெட்டு அபாயம்!
- விஜயகாந்துடன் கூட்டணி : சமக தலைவர் சரத்குமார் பரபரப்பு பதில்!
- சென்னையில் இடிந்து விழுந்த பால்கனி : பேத்தியை உயிரைக் கொடுத்து காப்பாற்றிய பாட்டி!
- எம்.எல்.ஏ’க்களை தக்க வைக்க காங் – ம.ஜ.த – தீவிரம் : நள்ளிரவில் விடுதியை காலி செய்து ஐதராபாத் பயணம்!
- கோவையில் அமமுகவினர் மீது தாக்குதல் – கார் கண்ணாடி உடைப்பால் பரபரப்பு!
- கர்நாடகாவில் அரசியல் சாசனம் மீதான தாக்குதல் தொடங்கிவிட்டது : நடிகர் பிரகாஷ் ராஜ்!
- நிர்வாணப்படுத்தி கொடுமைப்படுத்துறாங்க’ – நீதிமன்றத்திலேயே சட்டையை கழட்டி கதறிய கைதி!
- சென்னையில் மழையா? மகிழ்ச்சியோடு எதிர்பார்க்கும் மக்கள்!
- பணம் கொடுக்கலனா கொலைப் பண்ணிடுவேன் – மிரட்டல் மன்னர்கள் கைது!
- போதையில் பேருந்து ஓட்டியவரால் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!
- காவலர் அருங்காட்சியகம் – முதன்முறையாக தமிழகத்தில் திறப்பு!
TAMIL NEWS GROUP WEBSITES :