பேக்கரியில் பிறந்த குழந்தை இறப்பு!!

0
727
bakery emergency cesarean infant death, bakery emergency cesarean infant, bakery emergency cesarean, emergency cesarean infant death, emergency cesarean infant death, Tamil Netherland news, Netherland Tamil news

bakery emergency cesarean infant death

Hulst இல் உள்ள பேக்கரி Risseeuw இல் கடந்த திங்களன்று மாரடைப்பு ஏற்பட்ட தாய்க்கு குழந்தை ஒன்று பிறந்தது. பிறகு அத்தாய் நல்ல முறையில் மீட்டெடுக்கப்பட்டார். தாய் மற்றும் குழந்தை இருவரும் குறித்த நேரத்தினுள் வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டதாக கூறப்பட்டது.

கர்ப்பிணிப் பெண் Stationsweg ஜச் சேர்ந்த பேக்கரியில் காலை வேளையில் திடீரென ஒருவித  அசௌகரியம் அடைந்தார். அவசர சேவை அதிகாரிகள் பெருமளவில் சம்பவ இடத்திற்கு சமூகமளித்தனர். சிசேரியன் சத்திர சிகிச்சையின் மூலம் குழந்தை வெளியே எடுக்கப்பட்டது.

குழந்தை ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அந்த தாய் ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனைக்கு விரைந்தழைத்து செல்லப்பட்டார். போலீஸ் மற்றும் இரண்டு தீயணைப்பு படையினர் குழுக்கள், சாலையில் ஆம்புலன்ஸ் செல்ல உதவியது.

எனினும் PZC இல் போடப்பட்டிருந்த இரங்கல் செய்தியில், அவசர சிசேரியன் சத்திர சிகிச்சையின் மூலம் பிறந்த அக்குழந்தை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்குழந்தையின் தாயார் கடந்த திங்களன்று மீட்டெடுக்கப்பட்ட போதிலும், கடந்த வாரம் புதன்கிழமை இப்பெண் இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

bakery emergency cesarean infant death, bakery emergency cesarean infant, bakery emergency cesarean, emergency cesarean infant death, emergency cesarean infant death, Tamil Netherland news, Netherland Tamil news

Tamil News Groups Websites