நிரம்பி வழியும் நீர்த்தேக்கங்கள் – அவசர கதவுகள் திறப்பு

0
412
Five spill gates opened Udawalawa reservoir two gates opened KalaWewa

(Five spill gates opened Udawalawa reservoir two gates opened KalaWewa)

நாட்டில் நிலவி வரும் கடும் மழையுடனான காலநிலை காரணமாக மலையகத்தின் நீரேந்து பிரதேசங்களில் உள்ள நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளது.

இதன்படி, உடவளவை நீர்த்தேக்கத்தின் ஐந்து அவசர கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை கலாவெவ நீர்த்தேக்கத்தினதும் இரண்டு அவசர கதவுகள் திறக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் தற்பொழுது கடும் மழை பெய்வதால் தொடர்ந்து நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் வேகமாக உயர்ந்துவருகின்றது.

இதனால் தாழ் நிலப் பகுதியில் உள்ளவர்கள் அவதானத்துடன் இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

(Five spill gates opened Udawalawa reservoir two gates opened KalaWewa)

More Tamil News

Tamil News Group websites :