வெடிகுண்டு மிரட்டலின் காரணமாக ப்ரீடா மத்திய நிலையத்திலிருந்தோர் வெளியேற்றம்

0
693
bomb threat station evacuated people, bomb threat station evacuated, bomb threat station, bomb threat, station evacuated people, evacuated people, Tamil Netherland news, Netherland Tamil news

(bomb threat station evacuated people)

செவ்வாய்க்கிழமை மாலை ஒரு வெடிகுண்டு அச்சுறுத்தல் காரணமாக ப்ரீடா மத்திய நிலையத்தில் இருந்தோரை போலீசார் வெளியேற்றினர். இந்த நிலையம் மாலை 7:00 மணியளவில் சுற்றி வளைக்கப்பட்டது. இரவு 9:00 மணியளவில், எந்த வெடிபொருட்களும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று பொலிஸார் அறிவித்தனர்.

பொலிஸ் விசாரணை நடத்திய போது, Gravinnen van Nassauboulevard  சுற்றி போக்குவரத்தில் ஈடுபட்டிருந்த பஸ் மற்றும் ரயில் போக்குவரத்துகள் நிறுத்தி வைக்கப்பட்டன. காவல்துறையினர் அந்த பகுதிகளை சுற்றி வளைத்துக்கொண்டிருந்தபோது பயணிகள் காத்திருந்தனர்.

“நாங்கள் எப்போதும் ஒரு குண்டு அச்சுறுத்தலை தீவிரமாக எடுத்துக் கொள்கிறோம்,” என ட்விட்டரில் போலீசார் தெரிவித்தனர். குண்டுவெடிப்பு தொடர்பான நிபுணர்கள் மற்றும் ஒரு போலிஸ் மோப்ப நாயும்  தேடலில் பயன்படுத்தப்பட்டன.

இப்போது அந்த நிலையம் பாதுகாப்பாக இருப்பதாக பொலிஸார் உறுதியாக நம்புகின்றனர், அந்த நிலையத்தில் குண்டு வெடிக்க இருப்பதாக அறிக்கை செய்த நபரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

 

bomb threat station evacuated people, bomb threat station evacuated, bomb threat station, bomb threat, station evacuated people, evacuated people, Tamil Swiss news, Swiss Tamil news

Tamil News Groups Websites