செந்தனி நடு வீதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு!

0
551
Paris Courtille shooting

பரிஸில், ஞாயிற்றுக்கிழமை (மே 13) நள்ளிரவு, நபர் ஒருவர் காரிற்குள் வைத்து சுடப்பட்டுள்ளார். Paris Courtille shooting
பரிஸை அண்மித்த பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்று வருகிறது. செந்தனியின் Courtille நகரில் வைத்து ஞாயிற்றுக்கிழமை (மே 13) நள்ளிரவு, நபர் ஒருவர் காரிற்குள் வைத்து சுடப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.

காரில் சென்றுகொண்டிருந்த நபரினை, மற்றொரு காரில் வந்த சிலர் சுட்டுக்கொன்றுள்ளனர். அதன் பின்னர் குறித்த நபரின் காரின் சக்கரத்திலும் துப்பாக்கியால் சுட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பண கொடுக்கல் வாங்கல் காரணமாக இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

**Most Related Tamil News**

**Tamil News Groups Websites**