மாத்தறையில் நேற்றிரவு இடம்பெற்ற கொடூரம்: 3 பேர் பலி

0
743
fatal accident 3 dead matara

(fatal accident 3 dead matara )
மாத்தறை ஊருபொக்க – ரொட்டும்ப பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்தொன்றில் முச்சக்கரவண்டியில் பயணித்த மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முச்சக்கர வண்டியின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாத நிலையில், குறித்த முச்சக்கரவண்டி வீதியை விட்டு விலகி அருகிலிருந்த மரத்துடன் மோதியதிலேயே இவ் விபத்து சம்பவித்துள்ளது.

சம்பவத்தில் பஸ்கொட, பெங்கமுவ மற்றும் ஹதுகல ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 34, 50 மற்றும் 53 வயதானவர்களே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, சம்பவத்தில் படுகாயமடைந்த முச்சக்கரவண்டியின் சாரதி எம்பிலிப்பிட்டி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

https://elastic-varahamihira.159-65-237-106.plesk.page/2018/05/09/sarath-fonseka-apologized-maithripala-sirisena/

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Time Tamil News Group websites :