இனப் படுகொலையை வெளிச்சம் போட்டுக் காட்டும் தீப ஊர்திப் பவனி

0
1203
Deepa Procession mullivaikal remember day

(Deepa Procession mullivaikal remember day)
முள்ளிவாய்க்கால் இனப் படுகொலையை வெளிச்சம் போட்டுக் காட்டும் தீப ஊர்திப் பவனி வீரம் விளைந்த மண் வல்வெட்டித்துறையில் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

வடமாகாணத்தின் அனைத்து மாவட்டங்களூடாகவும் பயணித்து, மே 18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் மண்ணைச் சென்றடையவுள்ளது.

இந்த ஊர்திப் பவனியைத் தரிசித்து வணக்கம் செலுத்துமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

தமிழினப் படுகொலையான முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை எதிர்வரும் 18 ஆம் திகதி தமிழர் தாயகப் பிரதேசங்களில் அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில், வடமாகாணத்தில பொலிஸாரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், முள்ளிவாய்க்கால் படுகொலை வாரத்தின் மூன்றாம் நாள் இன்று என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

More Tamil News

Tamil News Group websites :

Tags; Deepa Procession mullivaikal remember day