கொழும்பில் உயிரிழந்த ரக்பி வீரர் : காரணம் வெளியானது

0
919
British rugby player dies Colombo reason

(British rugby player dies Colombo reason)
மூச்சு திணறல் காரணமாக உயிரிழந்த பிரித்தானிய ரக்பி வீரர் மற்றும் ஆபத்தான நிலையில் சிகிச்சைப்பெற்று வரும் மேலும் ஒரு வீரரும் அதிகளவு மதுபானம் அருந்தியுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

கடந்த 10 ஆம் திகதி 22 பேர் கொண்ட பிரித்தானிய தேசிய ரக்பி அணி இலங்கை வந்தது.

இவர்கள் கடந்த 12 ஆம் திகதி கொழும்பில் இடம்பெற்ற சிகேனபூர்வ ரக்பி போட்டிகளில் பங்குகொண்டதன் பின்னர் இரா போசனத்தை அருந்தியுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து கொள்ளுப்பிட்டியில் உள்ள இரவு விடுதி ஒன்றுக்கு சென்று பின்னர் அவர்கள் தங்கியுள்ள விருந்தகத்திற்கு மீண்டும் வந்தனர்.

இந்த நிலையில் நேற்று அதிகாலை குறித்த இரண்டு வீரர்களுக்கும் மூச்சு திணறல் ஏற்பட்டு, விருந்தக நிர்வாகனத்தினரால் தனியார் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்.

இதில் 26 வயதான ரக்பி வீரர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.

அவர்கள் அருந்திய மதுபானம் தொடர்பான தகவல் இதுவரை வெளியாகவில்லை.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

More Tamil News

Tamil News Group websites :

Tags:British rugby player dies Colombo reason,British rugby player dies Colombo reason