300 பொலிஸ் அதிகாரிகள் பணம் பெற்றார்களா? பதிலளித்தார் நிசாங்க

0
593
300 police officers Received bribes Nissanka Senadhipathi

(300 police officers Received bribes Nissanka Senadhipathi)
300இற்கும் அதிகமான பொலிஸ் அதிகாரிகள், பணம் பெற்றனர் என வெளியான செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என அவன்ட் கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிசாங்க சேனாதிபதி தெரிவித்துள்ளார்.

முன்னைய ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்ட அவன்ட் கார்ட் நிறுவனத்தின் தலைவர் மேஜர் நிசங்க சேனாதிபதி, தம்மிடம் பணம் பெற்ற 300 இற்கும் அதிகமான பொலிஸ் அதிகாரிகளின் பட்டியலை குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு வழங்கியுள்ளார் என செய்திகள் வெளியாகி இருந்தன.

இதில், குற்றப் புலனாய்வுப் பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த உயர் அதிகாரிகளும் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

நிசங்க சேனாதிபதியிடம் பணம் பெற்ற பொலிஸ் அதிகாரிகள் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் இவர்களிடம் வாக்குமூலங்கள் பெறும் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன.
இந்நிலையிலேயே பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு தான் பணம் வழங்கவில் என அவன்ட் கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிசாங்க சேனாதிபதி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணம் பெற்றுக்கொள்ளவும் இல்லை தான் இலஞ்சம் வழங்கவும் இல்லை.
இலஞ்சம் வழங்கியதாக ஊடகங்களில் வெளியான தகவல்களில் எவ்வித உண்மையும் கிடையாது.

முப்படையினர் மற்றும் பொலிஸ் திணைக்களத்தின் கூடைப்பந்தாட்டம், ரகர் போன்ற விளையாட்டுக்களுக்கு தமது நிறுவனம் அனுசரணை வழங்கியுள்ளது. இது தொடர்பிலான எழுத்து மூல கோரிக்கைகள் அடங்கிய ஆவணங்கள் தம்மிடம் உண்டு.

ஊடகங்களில் பொய்யான செய்தி வெளியிடப்பட்டமை அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது என்றார்.

More Tamil News

Tamil News Group websites :

(300 police officers Received bribes Nissanka Senadhipathi)