தந்தையின் அறிவீனத்தால் குழந்தைக்கு நேர்ந்த பரிதாபம்

0
438
dad attack mother missed shot infant baby death escape suspect

dad attack mother missed shot infant baby death escape suspect
பதுளை கந்தகெட்டி பகுதியில் தந்தை ஒருவரின் தாக்குதலினால் ஐந்து மாத குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.

இந்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றதாக பொலிசார் தெரிவித்தனர்.

கணவன் மனைவிக்கிடையில் கடுமையான வாய்தர்க்கம் ஏற்பட்டுள்ள நிலையில், தந்தை பொல்லால் மனைவியை தாக்கியுள்ளார்.

மனைவியின் மீது தாக்கிய போதும் பிள்ளையே தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது.

இந்நிலையில் தாக்குதலுக்கு இலக்கான குழந்தையை கந்தகெட்டி வைத்தியாசாலையில் சேர்ப்பித்துள்ளனர்.

எனினும் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய தந்தை தலைமறைவாகிய நிலையில் நேற்றைய தினம் பொலிசார் கைது செய்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
dad attack mother missed shot infant baby death escape suspect

More Tamil News

Tamil News Group websites :