கர்நாடகாவில் பா.ஜ.க. வென்றால்தான் தமிழக விவசாயிகளுக்கு நல்லது – பழனிச்சாமி

0
521
BJP Karnataka Chief Minister Palanisamy said done farmers Tamil Nadu

BJP Karnataka Chief Minister Palanisamy said done farmers Tamil Nadu

இந்திய கர்நாடகா மாநிலத்திவில் பா.ஜ.க. ஆட்சி அமைத்தால் தமிழக விவசாயிகளுக்கு நல்லது நடக்கும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

கர்நாடக சட்டசபைத் தேர்தல் தற்போது மும்முரமாக நடந்து வருகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை மே 15ஆம் திகதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மொத்தம் 222 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்து வருகிறது.

இந்த நிலையில், கர்நாடகாவில் பா.ஜ.க. ஆட்சி அமைத்தால் தமிழகத்திற்கு காவிரியிலிருந்து தண்ணீர் கிடைக்க வாய்ப்புள்ளது என்று சில நாட்களுக்கு முன்பு எச்.ராஜா பேட்டி அளித்து இருந்தார்.

அதேபோல் இன்று பேட்டி அளித்த பா.ஜ.க.வின் பொன்.ராதாகிருஷ்ணன் காவிரி பிரச்சினை தீர வேண்டுமென்றால் கர்நாடகாவில் பா.ஜ.க. வெற்றிபெற வேண்டும் என்று குறிப்பிட்டார்.

தற்போது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் இதே கருத்தை கூறியுள்ளார். அதன்படி, கர்நாடகாவில் பா.ஜ.க. ஆட்சி அமைத்தால் தமிழக விவசாயிகளுக்கு நல்லது நடக்கும். பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் மட்டுமே காவிரி பிரச்சினை தீரும் என பழனிச்சாமி கருத்து தெரிவித்துள்ளார்.

BJP Karnataka Chief Minister Palanisamy said done farmers Tamil Nadu

More Tamil News

Tamil News Group websites :