யாழில். எரிபொருட்களை பதுக்க முயற்சி; வரிசையில் காத்திருந்த மக்கள்

0
924
Public waiting Fuel stations Jaffna

(Public waiting Fuel stations Jaffna)
எரிபொருள்களின் விலை நேற்று நள்ளிரவுடன் அதிகரிக்கப்படுவதாக அறிவித்த நிலையில், எரிபொருள் விநியோகஸ்தர்கள் சிலர் அவற்றைப் பதுக்க முயற்சித்த நிலையில், பாவனையாளர் அதிகார சபையினரின் தலையீட்டினால் எரிபொருள் சீராக விநியோகிக்கப்பட்டது.

இந்தச் சம்பவம் யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

பெற்றோல் 20 ரூபாவாலும் டிசல் 9 ரூபாவாலும் மண்ணெண்ணெய் 57 ரூபாவாலும் நேற்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பப்பட்டது.

பெற்றோல் மற்றும் மண்ணெண்ணெயைக் கொள்வனவு செய்வதற்காக மக்கள் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்குச் சென்றனர்.

இதற்காக மோட்டார் சைக்கிள்கள், முச்சக்கர வண்டிகள் மற்றும் பெற்றோல் வாகனங்களுடன் மக்கள் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசையில் காத்திருந்தனர்.

அத்துடன், விவசாயிகள் உட்பட பலர் மண்ணெண்ணெயைக் கொள்வனவு செய்வதற்காக கான்களுடன் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசையில் காத்திருந்தனர்.

இந்த நிலையில், யாழ்ப்பாணத்திலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்கள் சில பெற்றோல் மற்றும் மண்ணெண்ணெய் விநியோகத்தை நிறுத்தி வாடிக்கையாளர்களுக்கு இல்லை எனத் திருப்பியனுப்பியுள்ளனர்.

இதுதொடர்பில் பொது மக்கள் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் சம்பவ இடங்களுக்குச் சென்ற பாவனையாளர்கள் அலுவல்கள் அதிகார சபையின் யாழ். மாவட்ட அதிகாரிகள், பெற்றோலிய கூட்டுத்தாபன அதிகாரிகளுக்கு அறிவித்து, சீரான எரிபொருள் விநியோகத்திற்கு வழிசமைத்தனர்.

எரிபொருட்களின் விநியோகத்தை சீராக முன்னெடுப்பது பெற்றொலியக் கூட்டுத்தாபனத்தின் பணியாகும். கூட்டுத்தாபனம் தனது இலகுபடுத்திய சேவைக்காகவே விநியோகத்தர்களை வைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களை நடத்துகின்றது.

எரிபொருள்களை பதுக்கி வைப்போர் மீது கூட்டுத்தாபனம் உரிய நடவடிக்கையை எடுக்கவேண்டும் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.

More Tamil News

Tamil News Group websites :

Tags; Public waiting Fuel stations Jaffna