போதைப் பொருட்களுடன் பெண் உட்பட மூவர் கைது

0
674
Three persons including woman arrested

(Three persons including woman arrested for drugs)
மீதொட்டமுல்ல பன்சலஹேன பகுதியில் வைத்து போதைப் பொருளுடன் பெண்ணொருவர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 86 லட்சத்துக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

கொழும்பு குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே, போதைப் பொருட்களுடன் குறித்த மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடம் இருந்து 503 கிராம் ஹெரோயின், 66 கிராம் கொக்கேய்ன், 2 கிராம் 90 மில்லிகிராம் அஸீஸ், டான்ஸின் எனப்படும் 42 போதை மாத்திரைகள் இருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, குறித்த மூன்று பேரிடம் இருந்து 10 கைத்தொலைபேசிகளும், 74 ஆயிரத்து 750 ரூபா பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட 25 வயது பெண் உட்பட இருவரும் புதுக்கடை நீதவான் நீதிமன்றில் இன்றைய தினம் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

More Tamil News

Tamil News Group websites :

Tags; Three persons including woman arrested for drugs