பேஸ்புக்கில் செய்த வேலை : குளியாபிட்டிய இளைஞன் கைது

0
882
facebook fraud arrested kuliyapitiya

(facebook fraud arrested kuliyapitiya)
வேறு நபர்களின் பேஸ்புக் கணக்குகளில் நுழைந்து அந்த கணக்குகளின் உரிமையாளர் போன்று செயற்பட்டு மோசடியில் ஈடுபட்டு வந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குளியாபிட்டிய, கம்புராபொல, மூனமல்தெனிய பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞன் ஒருவரே பொலன்னறுவை குற்ற விசாரணை பிரிவு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞன் பல பேஸ்புக் கணக்குகளுக்குள் நுழைந்து நண்பர்களிடம் ஈசி கேஷ் ஊடாக பணம் பெற்றுள்ளமை விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது.

சந்தேக நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், பேஸ்புக் பாவனையாளர்கள் மிகவும் அவதானமாக செயற்படுமாறும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Time Tamil News Group websites :