(Memory assassinated relationships right Tamil people)
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை யாழ். பல்கலைக்கழக மாணவர்களுடன் இணைந்து நடாத்த அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
தமிழ் மக்கள் மீது ஸ்ரீலங்கா அரசு மேற்கொண்ட இனவழிப்பின் 09 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் எதிர்வரும் 18 ஆம் திகதி முள்ளிவாய்க்காலில் நடைபெறவுள்ளது.
இதனை முன்னிட்டு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இன அழிப்பு ஒன்றின் மூலம் தமிழ் மக்களின் உரிமைக்காக நடாத்தப்பட்ட ஆயுதமேந்திய போராட்டம் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட நாளான மே 18 என்பது தமிழரது சரித்திரத்தில் மறக்க முடியாத கறைபடிந்த நாளாகும்.
அந்த நாள் தமிழினம் இன அழிப்புக்கு உள்ளாக்கப்பட்ட இனவழிப்பு தினமாகும். இந்த நாளை ஓரிடத்தில் நினைவு கூருவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு பல்கலைக்கழக மாணவர்கள் அனைத்துத் தரப்புக்களிடமும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எம்மைப் பொறுத்தவரை முள்ளிவாய்க்கால் இனவழிப்பு நாள் நினைவேந்தலின் முக்கியத்துவம் என்பது நினைவு கூரல் என்பதற்கு அப்பால் தமிழ் மக்கள் மீதான இனவழிப்பு, போர்க்குற்றங்கள் தொடர்பிலான விசாரணைகள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றிற்கு கொண்டுசெல்லப்படல் வேண்டும்.
அல்லது விசேட சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் ஒன்றின் மூலம் பக்கச் சார்பற்ற சர்வதேச விசாரணைக்கான குரல் ஒருமுகப்படுத்தி வலுப்படுத்தப்படல் வேண்டும் என்பதாகும்.
இந்த நினைவேந்தலை ஓரிடத்தில் ஒற்றுமையாக நடாத்த ஒத்துழைக்குமாறு கோரி பல்கலைக்கழக மாணவர்கள் கடந்த 30 ஆம் திகதி வெளியிட்டுள்ள தமது அறிக்கையில் ‘ஒற்றுமை என்ற பெயரில் எமது மக்களின் அரசியல் அபிலாசைகளை நீர்த்துப்போகச் செய்யும் நோக்கமோ தமிழ் மக்களுக்கான நீதி வேண்டிய பயணத்தில் முட்டுக்கட்டைகளாக இருப்போரை அரவணைக்கும் நோக்கமோ’ இல்லை என்பதனை உறுதிபடத் தெரிவித்துள்ளனர்.
அந்த வகையில் அவர்களது கோரிக்கைக்கு மதிப்பளித்து முள்ளிவாய்க்காலில் இடம்பெறவுள்ள நினைவேந்தல் நிகழ்வை பல்கலைக்கழக மாணவர்களுடன் இணைந்து நடாத்துவதற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சிகள் தீர்மானித்துள்ளன என்பதனை தெரிவித்துக் கொள்கின்றேன்.
மேலும் தாயக மண்ணில் கூட்டாகப் படுகொலை செய்யப்பட்ட எமது உறவுகளை கூட்டாக நினைவு கூருவதற்கான உரிமை தமிழ் மக்களுக்குள்ளது. எனவே முள்ளிவாய்க்காலில் நடைபெறும் நினைவேந்தல் நிகழ்வில் ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் கலந்து கொண்டு ஆதரவு வழங்குமாறு அன்புரிமையுடன் வேண்டிக் கொள்வதுடன், நேரில் செல்ல முடியாதவர்கள் இனவழிப்பு யுத்தத்தில் இறந்த எம் உறவுகளின் ஆத்மசாந்திக்காக பிராத்திக்குமாறும் வேண்டுகின்றோம் என்றும் செல்வராசா கஜேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
More Tamil News
- வனவிலங்கு இறைச்சிகளை வேட்டையாடி உண்ட மஹிந்த அரசாங்கம்; அதிர்ச்சித் தகவல்
- மூன்று சிறுமிகளை சீரழித்த குடும்பத்தினர்; நுவரெலியாவில் அதிர்ச்சி
- கட்டுநாயக்கவில் புறப்படவிருந்த விமானங்கள் தாமதம்
- விபத்தில் உயிரிழந்தவர் மூன்று கோடியை கடனாகப் பெற்ற ஆச்சரியம்
- தவறான சிகிச்சையால் 03 மாத குழந்தை பலியான சோகச் சம்பவம்
- குளவிக்கூட்டினால் மாணவர்களுக்கு ஏற்பட்ட விபரீதம்
- மாங்குளத்தில் சூறாவளி ; 12 வீடுகள் சேதம்
- பால்மா தட்டுப்பாடு ஏற்பட இடமளிக்கப் போவதில்லை
- மனைவி கள்ளக்காதல்; கணவனுக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு
- பெரிய வெங்காயம், உருளைக்கிழங்கின் வரி அதிகரிப்பு
Tamil News Group websites :
- Technotamil.com
- Tamilhealth.com
- Sothidam.com
- Sportstamil.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- timetamil.com
Tags; Memory assassinated relationships right Tamil people