(Netherland sending Afghanistan asylum seekers)
சுமார் 10 உதவி அமைப்புகளின் படி, ஆப்கானிஸ்தானுக்கு திருப்பி அனுப்பப்படும் புகலிடம் கோருவோரின் நிலைமை இன்னமும் மிகவும் ஆபத்தானது எனவும், அவர்களில் பலர், கடத்தப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு, கொல்லப்படுகின்றனர். புகலிடம் கோருவோர், நாடு கடத்தப்படுவதை நிறுத்த உதவி அமைப்புகள் டச்சு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறிப்பாக சிறுவர்களுடனான குடும்பங்கள் ஆப்கானிஸ்தானுக்கு திருப்பியனுப்பப்படுவதை நிறுத்துமாறு, கவனத்தை ஈர்ப்பதற்காக மே மாதம் முழுவதும் பிரச்சாரம் செய்யப்போவதாக உதவி அமைப்புக்கள் அறிக்கை விடுத்துள்ளன. சிரியாவிற்கு அடுத்ததாக பொதுமக்களின் வாழ்க்கையை அச்சுறுத்தும் நாடு, ஆப்கானிஸ்தான். 2017ம் ஆண்டில் 10,000 பொது மக்கள் கொல்லப்பட்டனர் என்பது குற்றிப்பிடத்தக்கது.
சர்வதேச மன்னிப்பு அமைப்பு, குழந்தைகள் பாதுகாப்பு, ஆப்கானியர்களை திருப்பி அனுப்ப வேண்டாம் அமைப்பு, INLIA, Kerk in Actie, Save the Children, LOS அறக்கட்டளை, UNICEF Nederland, மற்றும் அகதிகளுக்கான டச்சு கவுன்சில் VluchtelingenWerk Nederland இந்த நடவடிக்கையில் இணைந்துள்ளன..
Netherland sending Afghanistan asylum seekers, Netherland sending Afghanistan asylum, Netherland sending Afghanistan, Netherland sending, sending Afghanistan asylum seekers
ஆம்ஸ்டர்டாம் விடுதி சாளரத்திலிருந்து வீழ்ந்த சுற்றுலா பயணி காயம்
Tamil News Groups Websites
- Tamilhealth.com
- Sothidam.com
- Sportstamil.com
- Technotamil.com
- Timesrilanka.com
- Netrikkan.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- Worldtamil.news
- Tamilsportsnews.com